4.8
Religion & Spirituality
”ஒரு எழுத்தாளர் கதையை எழுத ஆரம்பித்தபின் அக்கதையே அவரை ஆட்கொண்டு தன்போக்கில் அவரை எழுதவைக்கும்” என்று பேராசிரியர் கல்கி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதற்கு தன் அனுபவத்தையே மேற்கோளாகக் காட்டினார். ‘
‘ராமன் வரும் வரை காத்திரு…’ எனும் இத்தொடரை எளியேன் எழுத நினைத்தபோது ராமாயண காவியத்தில் எத்தனை பாத்திரங்கள் அவனுக்காகவும் ராமகாரியத்தில் உதவுவதற்காகவும் காத்திருந்தன என்பதனை ஒரு பட்டியல் போட்டு இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் முடித்துவிடலாம் எனக்கருதித் தொடங்கினேன். ஆனால் கிட்டத்தட்ட மொத்த ராமகாதையையே சொல்ல வைத்துவிட்டது.
இது ஸ்ரீ ஸீதாராமன் கிருபையால் மட்டுமே சாத்தியம். ஏனெனில், நான் பண்டிதன் அல்ல. வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் முழுவதையும் மற்றும் ஏனைய காண்டங்களில் சில சர்கங்களை மட்டும் படித்தவன் நான. அதேபோல் கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்ததில்லை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘சக்ரவர்த்தி திருமகன்’, மற்றும் ‘Ramayana’ என்ற நூல்களை முழுமையாகப் பலமுறை படித்திருக்கிறேன். மற்றபடி பிரபல பெளராணிகர்களான அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாசாரியார், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி, தூப்புல் லக்ஷ்மிநரசிம்மன், வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோரது தமிழ் உபன்யாசங்களையும் ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் அப்பாலாசார்யுலு, மல்லாடி சந்திரசேகர சாஸ்திரி, சாகண்டி கோடீஸ்வரராவ், சாமவேதம் ஷண்முக சர்மா முதலானோரின் தெலுங்கு காலக்ஷேபங்களையும் கேட்ட பாக்கியத்தால் ராமாயணத்தில் புதைந்திருக்கும் தர்ம சூக்ஷ்மங்களையும் ஆன்மீக ரஹஸ்யங்களையும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன்.
”ஒருவன் தர்மத்தின் மார்கத்தில் நடந்தால் மிருகங்கள், பட்சிகள், ஏன் அணில் கூட, அவனுக்கு உதவிக்கரம் நீட்டும். அறநெறி வாழ்க்கைக்கு புறம்பாக நடக்கும் ஒருவனை அவன் உடன்பிறப்பு கூட கைவிட்டுவிடுவான்” என்று ராஜாஜி அவர்கள் ராமாயண சூக்ஷ்மத்தை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
நாமும் ஸ்ரீ ஸீதாராமனின் கருணைக்காகக் காத்திருப்போம்!
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ‘இராம’ என்ற இரண்டு எழுத்தினால்.
—கம்ப இராமாயணம் - ராமஸ்வாமி ஸம்பத்
ஆசிரியர் பற்றிய குறிப்பு
நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியவர். மெயி,, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் பணி புரிந்த பின், விசாகப்பட்டினத்து ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் குழு தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். 84 வயதாகும் இளைஞரான ஸம்பத் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் மொழியில் பேச்சாளர் கூட.
Release date
Audiobook: 8 July 2021
Tags
4.8
Religion & Spirituality
”ஒரு எழுத்தாளர் கதையை எழுத ஆரம்பித்தபின் அக்கதையே அவரை ஆட்கொண்டு தன்போக்கில் அவரை எழுதவைக்கும்” என்று பேராசிரியர் கல்கி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதற்கு தன் அனுபவத்தையே மேற்கோளாகக் காட்டினார். ‘
‘ராமன் வரும் வரை காத்திரு…’ எனும் இத்தொடரை எளியேன் எழுத நினைத்தபோது ராமாயண காவியத்தில் எத்தனை பாத்திரங்கள் அவனுக்காகவும் ராமகாரியத்தில் உதவுவதற்காகவும் காத்திருந்தன என்பதனை ஒரு பட்டியல் போட்டு இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் முடித்துவிடலாம் எனக்கருதித் தொடங்கினேன். ஆனால் கிட்டத்தட்ட மொத்த ராமகாதையையே சொல்ல வைத்துவிட்டது.
இது ஸ்ரீ ஸீதாராமன் கிருபையால் மட்டுமே சாத்தியம். ஏனெனில், நான் பண்டிதன் அல்ல. வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் முழுவதையும் மற்றும் ஏனைய காண்டங்களில் சில சர்கங்களை மட்டும் படித்தவன் நான. அதேபோல் கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்ததில்லை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘சக்ரவர்த்தி திருமகன்’, மற்றும் ‘Ramayana’ என்ற நூல்களை முழுமையாகப் பலமுறை படித்திருக்கிறேன். மற்றபடி பிரபல பெளராணிகர்களான அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாசாரியார், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி, தூப்புல் லக்ஷ்மிநரசிம்மன், வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோரது தமிழ் உபன்யாசங்களையும் ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் அப்பாலாசார்யுலு, மல்லாடி சந்திரசேகர சாஸ்திரி, சாகண்டி கோடீஸ்வரராவ், சாமவேதம் ஷண்முக சர்மா முதலானோரின் தெலுங்கு காலக்ஷேபங்களையும் கேட்ட பாக்கியத்தால் ராமாயணத்தில் புதைந்திருக்கும் தர்ம சூக்ஷ்மங்களையும் ஆன்மீக ரஹஸ்யங்களையும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன்.
”ஒருவன் தர்மத்தின் மார்கத்தில் நடந்தால் மிருகங்கள், பட்சிகள், ஏன் அணில் கூட, அவனுக்கு உதவிக்கரம் நீட்டும். அறநெறி வாழ்க்கைக்கு புறம்பாக நடக்கும் ஒருவனை அவன் உடன்பிறப்பு கூட கைவிட்டுவிடுவான்” என்று ராஜாஜி அவர்கள் ராமாயண சூக்ஷ்மத்தை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
நாமும் ஸ்ரீ ஸீதாராமனின் கருணைக்காகக் காத்திருப்போம்!
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ‘இராம’ என்ற இரண்டு எழுத்தினால்.
—கம்ப இராமாயணம் - ராமஸ்வாமி ஸம்பத்
ஆசிரியர் பற்றிய குறிப்பு
நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியவர். மெயி,, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் பணி புரிந்த பின், விசாகப்பட்டினத்து ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் குழு தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். 84 வயதாகும் இளைஞரான ஸம்பத் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் மொழியில் பேச்சாளர் கூட.
Release date
Audiobook: 8 July 2021
Tags
Step into an infinite world of stories
Overall rating based on 27 ratings
Heartwarming
Motivating
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 8 of 27
Lalitha
10 Jul 2021
Excellent narration! Very nice voice modulations. The Guruji voice modulation in the beginning was so soft and perfect. Nice summarized version of Ramayanam by the author! Must read for all!
Banumathi
26 Jul 2021
ராமாயணம் ராமன் வரும் வரை படித்ததும். கதை எழுதியதும். மிகவும். அருமையாக இருந்தது.Very nice. Voice. Modulation. Thanks. Sri Srinivasa
LK
15 Jan 2022
Narrative is awesome...
Ravichandran
6 Aug 2021
அருமை. தெய்வீகம் மணம்.வாசித்த ஸ்ரீ ஸ்ரீனிவாசா அவர்களின் படைப்பும் உற்சாகமும் பல குரல் பதிவும் நம்மை ரா மாயண காலம் கொண்டு செல்கிறது. ஆசிரியர் திரு சம்பத் எழு த்து சிறப்பு கதை யை வேகமாக நகர்த்துவது மற்றும் கம்பராமாயணம் வரிகள் அவற்றின் உறைகள் அருமை.அனைவரும் அவசியம் கேட்க.வாழ்க வளமுடன்
RAJASEKARAN
13 Sept 2021
Very rapid and unique writing of the voluminous epic! Excellent voice with amazing modulation of the reader deserves hearty congrats!!
Ethirajan
22 Jul 2021
Very nice and new small detail ones also
Rajani
1 May 2022
Good
Praveen
6 Mar 2023
Excellent, humbled by the character of Sri Rama, Jai SriRamajayam!!!
English
India